உள்ளங்களை நேசிப்பவர்கள்

Friday, August 12, 2011

தமிழ் ஜோக்ஸ்

சர்தார்ஜி

சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.

மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,

"சே இன்னைக்கும் விழணுமா?"
****************************************

கடவுள் எங்கே? 

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.


அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.


அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
"கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.
அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.


அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"


"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"

"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"
*************************************************

மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
*********************************************************

சர்தார்ஜியிடம் இன்டர்வியூ

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

3 comments:

Anonymous said...

thamasu thamasu super appu

Anonymous said...

super

Sivakumar, kangayam

nattrukkal said...

சூப்பர் ஜோக்‌ஸ்ம்மா...

Popular Posts