உள்ளங்களை நேசிப்பவர்கள்

Sunday, August 28, 2011

காங்கேயம் மாநகரில் காந்தியவாதி திரு.அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக அறவழி பேரணி!!!


காங்கேயம் மாநகரில் சனிக்கிழமை (27/08/2011) மாலை 3 மணி அளவில் ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக் பால் மசோதாவை நிறைவேற்றவும்  கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக காங்கேயம் இமைகள் இளைஞர்கள் இயக்கம் சார்பாக அறவழி பேரணி நடத்தப்பட்டது 
இதில் பல்வேறுதரப்பு மக்கள்ஜாதிமதம்கட்சி பாகுபாடின்றியும்அனைத்து வணிக பெருமக்களும்பெற்றோர்களும் , அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு திரு. அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பினார்கள். பேரணியானது காங்கேயம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து முறையே கடைவீதியை கடந்து பேருந்துநிலையம் வழியாக சென்று சென்னியப்பா தியேட்டர் அருகில் முடிக்கப்பட்டது.
காங்கேயம் மாநகரில் இமைகள் இளைஞர்கள் இயக்கம் ஆனது சமூக பொது நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொண்டு முன்மாதிரியாக திகழ்கிறது


Saturday, August 20, 2011

பிரதமர் ஐயா இந்த கடிதத்தை படிங்க...!

பிரதமர் ஐயா இந்த கடிதத்தை படிங்க...!
திப்பிற்கும் மரியாதைக்குறிய இந்திய நாட்டின் பிரதமர் அவர்களுக்கு உங்களால் ஆளப்படும் நாட்டின் கடைகோடியில் வாழுகின்ற ஒரு சராசரி இந்தியன் எழுதும் கடிதம்

    வணக்கம் ஐயா! 

         லமாக இருக்கிறீர்களா நீங்களும் உங்களது அமைச்சரவை சகாக்களும் நலம் தானா வேளாவேளைக்கு உணவு அருந்தி உடம்பை ஜாக்கிரதையாக கவனித்து கொள்ளுங்கள் வயதான காலத்தில் நீங்கள் நன்றாக இருந்தால் தான் உங்கள் மக்களாகிய நாங்கள் நலமுடன் வாழ இயலும்

ஐயா சில விசயங்களை உங்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறேன் நீங்கள் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட பஞ்சாப்பில் பிறந்தவர் ஒவ்வொரு அடித்தட்டு மக்களின் ஆசை கனவு என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் சாதரணமாக ஒரு பசுமாட்டையும் ஒரு ஏக்கர் நிலத்தையும் வைத்துக் கொண்டு வயிற்றை கழுவும் அப்பாவி குடியானவன் என்ன நினைப்பான்? தனது கொட்டகையில் அதிக மாடுகள் வேண்டும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நிலம் வேண்டும் மனைவி மக்களுக்கு நகை நட்டு செய்து போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை படுவான் 


குளிர்சாதன அறையிலிருக்கும் கனவான்கள் போல் அவனால் கால்களை தூக்கி மேஜைமேல் போட்டுக் கொண்டு கனவு கண்டு கொண்டிருக்க இயலாது தனது ஆசைகளை நிறைவேற்றி கொள்ள கடினமாக உழைக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியும் அப்படி உழைத்து சிறுக சிறுக சேமித்து கடேசியில் கையில் மிஞ்சும் பணத்தை யாரவது வந்து பறித்துக் கொண்டு போனால் அவன் மனம் எவ்வளவு பாடு படும் வயிறு எரிந்து சாபம் கொடுப்பான் தானே

அந்த அப்பாவியின் துயரத்தை துடைக்க ஊர் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும் ஏழையின் உழைப்பிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது தானே சட்டம் அதுதானே தர்மமும் கூட மெத்தப் படித்த உங்களுக்கு இந்த சின்ன விஷயம் தெரியாதா என்ன நான் சொல்லி விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் நீங்கள் மறந்து போய் விட்டிற்களோ என்ற எண்ணத்தில் ஞாபகப் படுத்த விரும்புகிறேன் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நம்மிடம் இருந்த சொத்துக்கள் என்ன? கோடிக்கணக்கான இந்தியர்கள் கைகளில் திருவோடும் இந்த பாழ்பட்ட ஜனங்களுக்கு எதாவது நன்மைகள் செய்ய வேண்டும் என்ற தலைவர்களின் நல்ல எண்ணமும் தவிர வேறு என்ன நம்மிடம் இருந்தது...? 


பொன்னும் மணியும் கொட்டிக்கிடந்த இந்திய தேசத்தை அந்நியர்கள் வந்து சுரண்டி கொண்டு போய்விட்டார்கள் கொள்ளையடித்து போய்விட்டார்கள் மூட்டை மூட்டையாக கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று எல்லா தரப்பு மக்களும் பரவலாக பேசினார்கள் இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என ஜப்பானிய மக்களை போல் நமது தேசத்தவர் அதிகமாக பாடுபட வில்லை என்றாலும் கூட ஓரளவு உழைத்து முப்பது வருடத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு சீர் படுத்தினார்கள்

அதன் பிறகு வந்த இந்த முப்பது வருடங்களில் நமது நாடு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் அந்த வளர்ச்சி அடித்தட்டு மக்களை சென்றடைய வில்லை என்பதை நீங்களும் மறுக்க மாட்டிர்கள் அதற்கு காரணம் என்ன எதாவது மாய சக்தி அந்த மக்களை மேலெழும்ப விடாமல் தடுக்கிறதா என்றால் அது நிச்சயம் இல்லை என்று உங்களுக்கு தெரியும்

ஊழலும் கருப்பு பணமும் இந்த நாட்டின் வளர்ச்சியை புற்று நோயை போல அரித்திருக்கிறது தடுத்திருக்கிறது என்பதை யாரும் மறைத்து பேசி விட இயலாது நீங்கள் கூட சுகந்திர தின விழாவில் கோட்டையில் கொடியேற்றும் போது ஊழல் மிகப் பெரிய தடைக்கல் என்று அழகாக சொல்லி இருக்கிறீகள் பிறகு என்ன தடை இருப்பதும் தடைக்கு காரணமாக இருப்பதும் எது என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது பிறகு அதை ஒழிப்பதற்கு செய்ய வேண்டியதை செய்வதில் உங்களுக்கென்ன கஷ்டம்...?


நீங்களே சொல்கிறீர்கள் மக்களின் நலத்திட்டதிற்காக ஒதுக்கப் படும் பணம் மக்களிடம் சென்று சேர்வதில்லை அதிகாரிகளின் சட்டை பைக்குள் தான் போகிறது என்று பிறகு அதை தடுப்பதில் கால தாமதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? உங்களை அதை செய்ய விடாமல் யாரவது தடுக்கிறார்களா? அப்படி தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பயப்படாமல் அடையாளம் காட்டுங்கள் இந்திய நாடே உங்களை சூழ்ந்து பாது காக்கும் தேசத்திற்கு பாதகம் செய்பவரை மோதி மிதித்து விட எழுந்து நிற்கும்

ஆனால் நீங்கள் தேச துரோகிகளை அடையாளம் காட்ட மாட்டீர்கள் அவர்களை தண்டிக்க மாட்டீர்கள் ஏனென்றல் அதற்கான துணிச்சலும் தைரியமும் உங்களிடம் இல்லை என்று மக்கள் பேசுகிறார்கள் நீங்கள் நடந்து கொள்ளும் விதமும் அப்படிதான் இருக்கிறது ஒரு பொருளாதார மேதையாக அப்பழுக்கற்ற மனிதராக உங்களை பார்த்த காலம் மலையேறி விட்டதாகவே தோன்றுகிறது ஒரு சாதாரண அடிமட்ட அரசியல்வாதி எப்படி பதவிக்காக நடந்து கொள்வானோ அப்படி தான் நீங்களும் செயல் படுகிறிர்கள்

ஊழலை ஒழிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்வதை தானே அன்னா ஹசாரே சொல்கிறார் அதை ஆதரிப்பதில் உங்களுக்குள்ள நடை முறை சிக்கல் என்ன என்று தான் எங்களுக்கு புரிய வில்லை ஹசாரே உங்களையோ உங்களது அரசாங்கத்தையோ வீட்டுக்கனுப்ப வேண்டும் என்று சொல்ல வில்லை நீங்கள் மகராசனாய் நூறு ஆண்டுகள் அரசாளுங்கள் நாங்கள் குறுக்கே வரவில்லை ஊழலை மட்டும் ஒழியுங்கள் என்று தானே சொல்கிறார் அதில் தவறு இருப்பதாக அந்த நோக்கத்தில் குற்றம் இருப்பதாக தெரிய வில்லையே 


தானொரு திட்டத்தை வகுத்து அதைத்தான் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில் ஹசாரே பேரில் குறையாக சொல்லலாம் அது ஜனநாயக மரபும் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதற்கு உங்கள் அரசாங்கம் சொல்லுகின்ற பதில் ஆணவத்தோடும் அதிகார மமதையோடும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்

ஊழலை ஒழி என்று சொல்பவன் பெயரிலேயே ஊழல் குற்ற சாட்டை சுமத்தி விட்டால் அவன் வாயடைத்து விடுவான் மக்களும் அதை நம்பி விடுவார்கள் எல்லாம் மாறும் எல்லாம் மறக்கப் படும் என்று உங்கள் அமைச்சரவை நினைப்பதாக தெரிகிறது தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் இப்போது நீங்கள் மாற்றி கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் அதற்க்காக மிகவும் வருத்தப் படுவீர்கள் உங்கள் கட்சியும் உங்களை பலிகடா ஆக்கும் நீங்களும் அவமான சின்னமாக மாற வேண்டிய நிலை வரும்

ஜனநாயக நாட்டில் அறவழி போரட்டத்தை இத்தனை நாட்கள் தான் நடத்த வேண்டும் என்று விதி முறை வகுப்பது கேலி கூத்தாகும் உங்கள் அரசு போடும் நிபந்தனை போல பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய சுகந்திர போருக்கு நிபந்தனை போட்டிருந்தால் வரலாறு எப்படியாகி இருக்கும் என்பதை சற்று சிந்தியுங்கள் ஒரு அந்நிய அரசாங்கம் நடந்து கொண்ட நாகரீக நடைமுறை கூட உங்களிடம் இல்லாதது வேதனையாக இருக்கிறது 


நீங்கள் சொல்விர்கள் இந்திய நாட்டில் அரசியல் சாசனப் படி எந்தவொரு குடிமகனும் பட்டினிகிடக்க கூடாது அது சட்டப் படி குற்றம் என்று நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நம் நாட்டு மக்களில் எத்தனை பேர் தினசரி முறைப்படி உணவருந்துகிறார்கள்? அனைவருக்குமே உணவு தன்னிரைவாக கிடைக்கிறது என்று தைரியமாக சொல்ல முடியுமா? நிச்சயம் உங்களால் முடியாது சாலை ஓரங்களில் சத்திரம் சாவடிகளில் மரத்தடிகளில் தினம் தினம் நம் நாட்டில் நடைபெறும் பட்டினி சாவை உங்கள் அரசியல் சாசனம் தீர்த்து வைத்துள்ளதா? அப்படி தீர்த்து வைத்துள்ளது என்று நீங்கள் ஊறுதியாக சொன்னால் அதன் பிறகு உண்ணா விறதங்களை தடை செய்யுங்கள் அது வரை அதை தடை செய்யும் யோக்கியதை உங்களில் யாருக்கும் கிடையாது

ஒரு சிறிய நெருப்பு துண்டு தான் அடர்ந்த காட்டையே எரித்து சாம்பலாக்கும் லட்சோப லட்சம் இந்தியர்களின் மனக் கொதிப்பின் சிறிய அடையாளம் தான் அன்னா ஹசாரே அவரை தனிமனிதர் என்று அசட்டையாக நினைத்து நடவடிக்கை எடுத்திர்கள் என்றால் கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து கொண்ட வானரம் போல் ஆகி விடுவிர்கள் ஒரு ஹசாரேயை தடுக்க நினைத்தால் ஒழிக்க நினைத்தால் உங்கள் அரசாங்கத்தின் இரும்பு கரங்கள் அதை சுலபமாக செய்து முடித்து விடும் ஆனால் அதன் பிறகு மூலை மூலைக்கு கிளம்பும் ஹசாரேக்களை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது சுனாமி அலை முன்னால் தவிடு பொடியாகும் பல மாடி கட்டிடங்கள் போல உங்கள் கதையும் ஆகி விடும் 


எங்களது தாய்த்திரு நாடு விடுதலை என்பதை விலை கொடுத்து வாங்க வில்லை! எண்ணற்ற தியாகிகளை பலி கொடுத்து வாங்கியது எங்கள் மக்களின் எலும்புகள் ஓடிகின்ற சத்தம் தான் ஆங்கில அரசாங்கத்தின் செவிப்பறையை கிழித்தது அவர்கள் சிந்திய ரத்தம் தான் ஏகாதிபத்தியத்தின் மூச்சை திணறடித்தது எங்கோ ஒரு மூலையில் வேலூர் கோட்டைக்குள் நடந்த சின்னஞ்சிறிய சிப்பாய் கலகம் தான் நாடு முழுவதும் சுதந்திர வேள்வியாக கொழுந்து விட்டு எரிந்தது

அதே நிலைமை இன்னொரு முறை நடை பெறாது என்று கனவு காணாதிர்கள் முந்தைய அந்நிய அரசாங்கம் ஓடி ஒழிய அவர்களுக்கென்று ஒரு நாடு இருந்தது உங்களுக்கும் உங்கள் கூட்டத்தாருக்கும் இந்த நாட்டை விட்டால் வேறு கதி இல்லை எனவே உங்களை காப்பாற்றி கொள்ளவதற்காவது இன்னொரு சுதந்திர போராட்டம் நடை பெறுவதற்கு முன்பு திருந்துங்கள் அல்லது திருந்துவதற்காவது ஆசை படுங்கள்

ஐயா பிரதமரே! இந்த நாட்டின் சிறந்த பிரதமர் நீர் ஒருவர் மட்டும் தான் என்று உலகமும் மக்களும் ஒன்றாக கருதுவதற்கு மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களோடு தோள் கொடுங்கள் இல்லை என்றால் மாளிகைகுள் மக்கள் புகுந்து விடுவார்கள் அது உங்களது தகுதியை மிகவும் சீரழித்து விடும் 

இதில் கவனமாக செயல் படுங்கள் மீண்டும் சொல்கிறேன் உடல் நலத்தை நல்லபடியாக கவனித்து கொள்ளுங்கள் எங்கள் கிராமத்தில் புத்தி நன்றாக இருந்தால் சரீரம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள் ஆகவே முன்னதை நலப்படுத்துங்கள் பின்னது தானாக சரியாகும்  

இப்படிக்கு உங்கள் குடிமகன்

 
 
 
 
 
 
 

 

Friday, August 12, 2011

தமிழ் ஜோக்ஸ்

சர்தார்ஜி

சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.

மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,

"சே இன்னைக்கும் விழணுமா?"
****************************************

கடவுள் எங்கே? 

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.


அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.


அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
"கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.
அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.


அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"


"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"

"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"
*************************************************

மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
*********************************************************

சர்தார்ஜியிடம் இன்டர்வியூ

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

அண்டார்டிகா துருவப் பகுதியில் புதிய பனி மலை

அண்டார்டிகா துருவப் பகுதியில் புதிய பனி மலை



சுனாமி மற்றும் நிலநடுக்க அதிர்வுகளால் துருவப்பகுதிகளில் ராட்சத பனிகட்டி கல் உடைந்து புதிய பனி மலை உருவாகிறது என நாசா விஞ்ஞானிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

கிரையே ஸ்பியர் எனப்படும் குறைந்த அழுத்த பகுதியில் ஏற்படும் உருவாக்கத்தை ஆராயும் நிபுணரான கெல்வி ப்ரண்ட் அந்த உண்மையை கண்டறிந்துள்ளார்.

இவர் கோடர்டு விண்வெளி பயண மையத்தின் விஞ்ஞானி ஆவார். ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதால் அண்டார்டிகா துருவப் பகுதியில் ஒரு ராட்சத பனி உடைந்து புதிய பனி மலை உருவாகி உள்ளது என இவரது ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பான் பசிபிக் கடல் பகுதியில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டதன் விளைவாக இந்த மலைக்கட்டி உருவாகி உள்ளது.

துருவ கடல் பகுதியில் பெரிய கட்டிகள் உடைவதாலும் பனிப்பொழிவு குவிவதாலும் புதிய பனிமலைகள் உருவாகின்றன. செயற்கை கோளின் பல்வேறு பிம்ப வடிவங்களை ஆய்வு செய்து நாசா விஞ்ஞானிகள் குழு இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளது.

சுனாமி மற்றும் நிலநடுக்க அதிர்வுகளால் துருவப்பகுதிகளில் ராட்சத பனிகட்டி கல் உடைந்து புதிய பனி மலை உருவாகிறது என நாசா விஞ்ஞானிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

கிரையே ஸ்பியர் எனப்படும் குறைந்த அழுத்த பகுதியில் ஏற்படும் உருவாக்கத்தை ஆராயும் நிபுணரான கெல்வி ப்ரண்ட் அந்த உண்மையை கண்டறிந்துள்ளார்.

இவர் கோடர்டு விண்வெளி பயண மையத்தின் விஞ்ஞானி ஆவார். ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதால் அண்டார்டிகா துருவப் பகுதியில் ஒரு ராட்சத பனி உடைந்து புதிய பனி மலை உருவாகி உள்ளது என இவரது ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பான் பசிபிக் கடல் பகுதியில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டதன் விளைவாக இந்த மலைக்கட்டி உருவாகி உள்ளது.

துருவ கடல் பகுதியில் பெரிய கட்டிகள் உடைவதாலும் பனிப்பொழிவு குவிவதாலும் புதிய பனிமலைகள் உருவாகின்றன. செயற்கை கோளின் பல்வேறு பிம்ப வடிவங்களை ஆய்வு செய்து நாசா விஞ்ஞானிகள் குழு இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளது.

நன்றி :  http://www.thedipaar.com/

Monday, August 1, 2011

கொங்குநாட்டில் பஞ்சபூத திருத்தலங்கள்


கொங்குநாட்டில் பஞ்சபூத திருத்தலங்கள்

நமது கொங்குநாட்டில் அடியார்களால் பாடல்பெற்ற பிரசித்திபெற்ற திருத்தலங்கள் பல உள்ளன, அவற்றுள் பஞ்சபூத திருத்தலங்களாக  கீழ்க்கண்ட ஐந்து திருத்தலங்கள் பற்றி பல பாடல்களில் அடியார்கள் குறிப்பிட்டுள்ளார் அவைகள் இறைவனின் நமசிவாய என்னும் மந்திர சொல்லை ஒத்துவருகிறது
ந  -    நிலம்     -      கருவூர் (கரூர்) 
ம  -    நீர்        -     கொடுமுடி (வெஞ்சைமாக்கறை) 
சி  -    நெருப்பு   -     திருச்செங்கோடு (செங்குன்றூர்) 
வா -    வாயு     -     பவானி (திருநணா) 
ய  -    ஆகாயம்  -     அவினாசி (பூண்டி)

இதனைப்பற்றிய பழம்பெரும் பாடல் ஒன்று

ஆதி கருவூர் அணிவெஞ்சை மாக்கறைசை
நீதி அவினாசி நீள்நணா - மேதினியின்
தஞ்சமாம் செங்குன்றூர் தன்முருகன் பூண்டி தமை
நெஞ்சமே நித்தம் நித்தம் நினை

திருத்தலயாத்திரை செல்லும்முறை

இத்திருத்தல யாத்திரை செல்வோர் முதலில் கரூர் அல்லது கொடுமுடியில் தொடங்கி முறையே மூன்றாவது திருச்செங்கோடு, பவானி கடைசியாக அவினாசியில் முடிக்கவேண்டும். முறையே கொடுமுடி காவேரியிலும் மற்றும் பவானி கூடுதுறையிலும் குளிக்க வேண்டும். யாத்திரை தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள் முழுவதும் சிவாய நம ஓம், சிவாய நமஓம் : சிவாய நமஓம், நமசிவாய சொல்லிக்கொண்டு யாத்திரை செல்லவேண்டும்.

யாத்திரையானது அதிகாலை ஆறு மணிக்கு கொடுமுடி நாதரையும், காலை ஒன்பது மணிக்கு பசுபதீஸ்வரரையும், மதியம் பன்னிரண்டு மணிக்கு அர்த்தநாதீஸ்வரரையும், மாலை நான்கு மணிக்கு சங்கமேஸ்வரரையும், மாலை ஆறு மணிக்கு அவனாசி லிங்கேஸ்வரரையும் வணங்கி வாழ்த்து துதி போற்றி வரவும்.

திருத்தலயாத்திரையின் பயன்கள்
       ஏதேனும் ஒரு சிவ திருத்தலத்தில் ஐந்து ஏழைகளுக்கு அல்லது அடியார்களுக்கு உணவு அளிக்கவேண்டும். ஐந்து பசுக்களுக்கு புல் கொடுக்கவேண்டும். முன்னோர்களுக்கு பிண்டமும், பறவைகளுக்கு உணவும் கொடுக்கவேண்டும்.இதனையே பஞ்ச மஹா யக்ஞம் என்று வேதம் கூறுகிறது.

இவ்வாறு செய்து பஞ்சபூத திருத்தல யாத்திரை சென்றால் பஞ்ச மஹா பாவங்கள் (கொலை, களவு, கள், காமம், பொய்) விலகும் என்பது ஐதீகம் ஆகும்.

நன்றி: தவத்திரு சுவாமி ரத்தினானந்தகிரி, சித்தர் தவகுடில், சிவன்மலை, காங்கேயம்.

Popular Posts