காங்கேயம் மாநகரில் சனிக்கிழமை (27/08/2011) மாலை 3 மணி அளவில் ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக் பால் மசோதாவை நிறைவேற்றவும் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக காங்கேயம் இமைகள் இளைஞர்கள் இயக்கம் சார்பாக அறவழி பேரணி நடத்தப்பட்டது
இதில் பல்வேறுதரப்பு மக்கள், ஜாதி, மதம், கட்சி பாகுபாடின்றியும், அனைத்து வணிக பெருமக்களும், பெற்றோர்களும் , அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு திரு. அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பினார்கள். பேரணியானது காங்கேயம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து முறையே கடைவீதியை கடந்து பேருந்துநிலையம் வழியாக சென்று சென்னியப்பா தியேட்டர் அருகில் முடிக்கப்பட்டது.
காங்கேயம் மாநகரில் இமைகள் இளைஞர்கள் இயக்கம் ஆனது சமூக பொது நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொண்டு முன்மாதிரியாக திகழ்கிறது
1 comment:
u did a good job in u r town ,keep it up
Post a Comment