நம்து நாட்டின் 66 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாங்களும் எங்களது பகுதில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினோம். அதனை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சி கொள்கிறேன்.
எங்களது பகுதியானது காங்கேயம் மாநகரில், கோவை ரோட்டில் அமைந்துள்ள லட்சுமி நகர் ஆகும். இங்கு மக்கள் முன்னிலையில் சுதந்திர தின கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் திரு.கந்தசாமி (முன்னால் காந்தி கதர் வாரிய ஊழியர்) அவர்களால் கொடியேற்றம் செய்யப்பட்டது, மேலும் சிறப்பு விருந்தினராக திரு. துரைசாமி அவர்கள் 13ம் நம்பர் வார்டு மக்கள் பிரதிநிதி கலந்துகொண்டார்.
இவ்விழாவானது நான், திரு.சாம்ராஜ், திரு.சௌந்தராஜ் மற்றும் திரு.செந்தில் அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இது எங்களது நகரில் நாங்கள் நடத்தும் 10ம் ஆண்டு விழாவாகும்.
இவ்விழாவின் சில நிழற்படங்கள் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
வாழ்க பாரதம்! வந்தே மாதரம்!! ஜெய் ஹிந்த்!!!